காட்பாடி தாராபடவேடு ஏரி ரெயில்வே தண்டவாளம் அருகே பிளாஸ்டிக் கழிவுகளை தினமும் கொட்டி செல்கின்றனர். இதனால் அங்கு மலைபோல் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இவற்றை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திருஞானம், காட்பாடி.