பார்வதிபுரத்தில் இருந்து கனியான்குளம் செல்லும் சாலை உள்ளது. அந்த பகுதியில் குடியிருப்புகளில் சேகரிக்கும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை சிலர் இந்த சாலையோரத்தில் கொட்டி தீவைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த பகுதி மற்றும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் துர்நாற்றம் வீசுவதுடன், புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக குழந்தைகள், முதியோர் சுவாச பிரச்சினையால் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த சாலையோரத்தில் குப்பைகளை தீவைத்து எரிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்த மனோகரன், கனியான்குளம்.