தொற்று நோய் அபாயம்

Update: 2026-02-22 18:11 GMT

மதுரை சுந்தரராஜபுரத்தை அடுத்த டி.வி.எஸ். நகர் சாலையில் அமைந்துள்ள பொன்மாரி நகர் தெருவின் அருகே சாலையின் ஓரத்தில் சிலர் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகளை அதிகளவில் கொட்டி செல்கின்றனர். இதில் எழும் துர்நாற்றத்தால் அச்சாலையில் பயணிக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் இதனால் தொற்று நோய் பரவும் நிலை உள்ளதால் மேற்கண்ட பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்