சுகாதார சீர்கேடு

Update: 2026-02-22 17:42 GMT

கோவை பாப்பநாயக்கன்புதூர் விவேகானந்தர் வீதியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அந்த குப்பைகளை தெருநாய்கள் சாலை வரை இழுத்து போடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், அப்பகுதி பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு தொடர்கிறது. எனவே அங்கு குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்