கோவை கணபதி கணேஷ் லே அவுட் பின்புறம் ஜெயப்பிரகாஷ் நகர் பகுதியில் சாலையோரங்களில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சாலையும் சேறும் சகதியுமாக உள்ளது. சேறும், சகதியுடன் குப்பைகள் கலந்து சாக்கடை போல காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.