புகைமூட்டதால் பொதுமக்கள் அவதி

Update: 2023-03-12 18:48 GMT

புகைமூட்டதால் பொதுமக்கள் அவதி

திருமுருகன்பூண்டி நகராட்சி தேவராயம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இந்தநிலையில் அங்கு கொட்டப்பட்ட குப்பையில் யாரோ தீ வைத்ததாக தெரிகிறது. இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிப்பட்டனர். எனவே கிணற்றில் குப்பை ெகாட்டுவதை தடுக்க வேண்டும்.

பாலு, அனுப்பர்பாளையம்.

---

மேலும் செய்திகள்