நாமக்கல் நகரில் திருச்சி சாலையில் மேம்பாலம் அருகில் அழகு நகர் செல்லும் சாலையில் மேம்பாலத்தையொட்டி குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நாய்களும் அந்த பகுதியில் அதிக அளவில் சுற்றுவதால் குப்பைகளை சாலைகளில் இழுத்து போட்டு செல்கின்றன. எனவே அந்த பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.