சாலையோரம் குப்பைகள் கொட்டலாமா?

Update: 2026-09-06 13:20 GMT

பென்னாகரம்-நாகமரை பிரதான சாலையில், நாகமரை அருந்ததியர் நகர் பகுதியில், சாலையோரம் மலை போல குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த குப்பையில் இறந்து போன நாய் உள்ளிட்டவற்றை வீசுவதால் அதிகப்படியான துர்நாற்றம் வீசுகிறது. இந்த சாலையை கடக்கும் பொதுமக்கள் மூக்கை பிடித்தவாரே செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடும், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் குப்பைகள் கொட்டாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்