சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் ஓரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் குப்பையின் துர்நாற்றத்தால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தேங்கி கிடக்கும் குப்பைகளை விரைந்து அகற்றுவார்களா?