பென்னாகரம் பஸ் நிலையம் அருகே உள்ள இறைச்சி கடைகள் சுகாதாரமற்ற முறையில் செயல்படுகின்றன. மேலும் இறைச்சி கழிவுகளை கழிவுநீர் கால்வாயில் கொட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.