ஆற்றில் குவியும் குப்பை கழிவுகள்

Update: 2026-05-31 13:17 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமன் தீர்த்தம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. குப்பை கழிவுகளால் ஆற்றில் குளிக்கும் பக்தர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்றி பக்தர்களுக்கு நோயின்றி சுத்தமான தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்