மாத்தூர் தொட்டிப்பாலம் சிறந்து சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் பயன்படுத்தும் உணவு பொருட்களின் பிளாஸ்டிக் உறைகளை அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும் வீசிவிட்டு செல்கின்றனர். சிலநேரங்களில் அவை எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அந்த பகுதியில் சம்பந்தப்பட்ட ஊராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை அறிவிப்பு பதாகைகள் வைக்க வேண்டும். அதை மீறும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு சுற்றுலா தலத்தை பாதுகாக்க வேண்டும்.
-ஜஸ்டின் ஜாஸ்ப்பர், செருப்பாலூர்.