திருவந்திபுரத்தில் கெடிலம் ஆற்றங்கரையோரம் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு எரியூட்டப்படுகின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.