நோய்தொற்று ஏற்படும் அபாயம்

Update: 2026-05-10 14:01 GMT

சென்னை செனாய்நகர், புல்லா அவன்யூ சாலையில் மகப்பேறு ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. அதன் அருகில் உள்ள சாலை ஓரங்களில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதியில் ஏராளமானோர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். சிலர் சிறுநீர் கழிப்பதற்கு அந்த இடத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்