திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் முகம் சுளித்தபடி பஸ்சுக்காக காத்திருக்கும் அவல நிலை உள்ளது. எனவே குப்பைகளை விரைந்து அகற்ற வேண்டும்.