சேலம் ரத்தினசாமிபுரத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சாலையில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மாநகராட்சி ஊழியர்கள் அவ்வப்போது வந்து அவற்றை அகற்றினாலும், அடுத்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் குப்பைகள் சேர்ந்து சாலை முழுவதும் பரவலாக காணப்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் கூடுதலாக குப்பைத்தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.