மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை நிலையூர் கால்வாய் பகுதியில் சிலர் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் கால்வாய் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு காணப்படுவதுடன் இதில் எழும் துர்நாற்றத்தால் இவ்வழியே செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கண்ட கால்வாயில் கிடக்கும் குப்பை மற்றும் கழிவுகளை அகற்றவும், கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் முன் வர வேண்டும்.