நாகர்கோவில் கோட்டார் பகுதியில் கவிமணி பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகில் எதிர்புறம் சிலர் இரவு நேரங்களில் சாலையோரத்தில் பழத்தோல், பிளாஸ்டிக் குளிர்பான பாட்டில்கள் ஆகிய கழிவுகளை கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால், அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், சாலையோரமாக நடந்து செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதசாரிகள் நலன்கருதி சாலையோரத்தில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபஞ்சன், நாகர்கோவில்.