திருப்பூர் கே.செட்டிபாளையத்தில் இருந்து பழவஞ்சிப்பாளையம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கோவில்கள், வீடுகள் மற்றும் பல்வேறு வணிக வளாகங்கள் உள்ளன. இந்த நிலையில் சாலையின் ஓரத்தில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குறிப்பாக வாகனங்களில் செல்பவர்கள் அந்த இடத்தை கடக்கும் போது முகம் சுழிக்கும் நிலை உள்ளது. மேலும் நெருநாய்கள் அந்த குப்பைகளில் உள்ள உணவுகளை தின்பதற்காக அங்கு சென்று அவற்றை நாசப்படுத்துகின்றன. இதனால் குப்பைகள் சாலையில் சிதறி கிடக்கிறது. நாய்கள் அங்குமிங்கும் சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகன விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து, குப்பைகளை அகற்ற வேண்டும்.