மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை நிலையூர் கால்வாய் பாலம் அருகில் சிலர் குப்பைகளை கொட்டி அதில் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் இதில் எழும் புகையால் அப்பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு வருகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குப்பைகளை எரிக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்களா?