திருவிதாங்கோடு அருகே உள்ள சேவியர்புரம் கிராமத்தில் வயக்குளம் உள்ளது. இந்த குளத்து தண்ணீரை அப்பகுதி மக்களும், அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கும் பயன்படுத்தி வந்தனர். சமீபகாலமாக இந்த குளத்தை முறையாக பராமரிக்காததால் சேரும் சகதியுமாகவும், செடிகொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெனி, சேவியர்புரம்.