சென்னிமலையில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் ஈங்கூர் ஊராட்சிக்குட்பட்ட சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் முகம் சுழித்தவாறு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?