நோய் பரவும் அபாயம்

Update: 2026-02-08 14:32 GMT

வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் இறைச்சி கடைகளில் இருந்து கழிவுகளை வெண்ணந்தூர் ஏரியில் கொட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், தெருநாய்கள் அதனை எடுத்து வீடுகளின் அருகே போடுவதினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. தற்போது பறவை காய்ச்சல் நோய் பரவி கொண்டு வருவதினால் இது போன்ற கழிவுகளை அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்