திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் இருப்பிட சான்று உள்பட பல்வேறு சேலை தொடர்பாக வந்து செல்கின்றனர். இந்நிலையில் அலுவலகத்தின் பின்புறம் குப்பைகள் மலைபோல் தேங்கியுள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் நலன்கருதி தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.