கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில் தெருவில் அதிகளவில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி, பொதுமக்களுக்கு பல்வேறு விதமான தொற்று நோய்களும் பரவும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.