தேங்கி கிடக்கும் குப்பைகள்

Update: 2026-02-01 13:50 GMT

அரியலூர் அருகேயுள்ள எருத்துக்காரன்பட்டி கிராமத்தில் ஏராளமான வீடுகள், கடைகள் உள்ளன. இங்குள்ள அண்ணாநகர் பகுதியில் சாலையோரம் உள்ள வாய்க்காலில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள தெருநாய்களும், பன்றிகளும் குப்பைகளை கிளறுகின்றன. இதனால் சாலை முழுவதும் குப்பைகள் பரவி கிடக்கின்றன. மேலும், அப்பகுதியில் அதிகளவில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் சூழல் நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குப்பைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்