திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் தச்சூர், பொன்னேரி நெடுஞ்சாலையில் சாலையின் ஓரத்தில் குப்பைகளும், கழிவுகளும் வீசப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் அதிகமாக வீசுகிறது. அந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கினை மூடிக்கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாய நிலையில் உள்ளது. எனவே மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.