குப்பைத்தொட்டி அமைக்கப்படுமா?

Update: 2026-02-01 11:13 GMT

புதுக்கோட்டை மாவட்டம் மேலராஜவீதியானது பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு உணவு விடுதிகள், டீக்கடைகள், பழக்கடைகள் அதிகமாக உள்ளன. இந்த கடைகளில் சேகரமாகும் குப்பைக் கழிவுகளை கருப்பு பிளாஸ்டிக் பைகளில் கட்டி சாலையோரம் வீசி செல்கின்றனர். இதை அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் மற்றும் கால்நடைகள் கிளறுவதால், குப்பைகள் சாலையில் பரவிக்கிடக்கின்றன. இதனால் அப்பகுயில் கடும் துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். எனவே அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, கழிவுகளை கொட்ட குப்பைத்தொட்டி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்