சாலையோரம் கிடக்கும் குப்பைகள்

Update: 2026-01-25 13:10 GMT

கரூர் ராயனூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு வருவதினால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் மழை பெய்யும் போது இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்