பொங்குபாளையம் ஊராட்சி பரமசிவம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் குப்பைகள் அகற்றப்படாமல் மூட்டை மூட்டையாக குவிந்து கிடக்கிறது. இதனால் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிற்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். மேலும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதேபோல் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
குமார், பொங்குபாளையம்.