ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நகர் பகுதியில் உள்ள சில முக்கிய சாலையோரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் காற்றில் பறக்கும் குப்பைகள் வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. எனவே சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.