சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள சில முக்கிய சாலைகளின் இருபுறங்களிலும் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. மேலும் காற்றில் பறக்கும் குப்பைகள் வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. எனவே சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.