பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள ஏரியில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் மழை பெய்யும் போது இந்த குப்பைகள் ஏரியில் தேங்கும் தண்ணீருடன் கலந்து தண்ணீர் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், இந்த ஏரியில் தேங்கி நிற்கும் தண்ணீரை கால்நடைகள் குடிக்கும்போது அவற்றின் உடல்நிலை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏரியில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.