சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகர் பகுதியில் உள்ள சில முக்கிய சாலையோரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் அதிகளவில் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.