விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ்நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சாலையின் ஓரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அவ்வழியே நடந்து செல்லும் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?