திருவள்ளூர் மாவட்டம், செண்ணீர்குப்பம் முதல் திருவேற்காடு செல்லும் பிரதான சாலை ஓரங்களில் மர்ம நபர்கள் குப்பைகளை மலைபோல அதிகளவில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுப்புற சீர்கேடு ஏற்படுவதோடு ஆடு,மாடுகளும் அவைகளை உண்ணும் அவலம் இருந்து வருகிறது. சாலைகளில் அலையும் மாடுகளால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கிறது. பொதுமக்கள் அவதியுறும் இந்த குப்பை கொட்டும் இடத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும்.