சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகர் பகுதி சாலையோரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் அதிகளவில் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகளால் சாலையோரங்களில் நடந்து செல்லும் நடைபாதையினர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் குப்பைகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வருமா?