நிரம்பி வழியும் குப்பைத்தொட்டி

Update: 2025-09-28 11:36 GMT

பெரம்பலூர் வட்டம் செங்குணம் அண்ணா நகர் தெற்கு பகுதியில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவகையில் சாலையோரம் குப்பைத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை தொட்டி நிரம்பிய நிலையில் குப்பைகள் கீழே விழுந்து கிடக்கின்றன. குப்பைகள் அப்புறப்படுத்தாமல் உள்ளதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றுவதுடன், குப்பை தொட்டியை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்