அரியலூர் மாவட்டம் செந்துறை சிவதாண்டேஸ்வரர் நகர் (பழைய திடிற்குப்பம்) செல்லும் வழியில் பெரிய ஏரி ஓடை உள்ளது. இதில் பன்றி கழிவுகள் மற்றும் கோழிகழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ்வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். மேலும் பொதுமக்கள், முதியவர்கள், குழந்தைகளுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.