திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பைபாஸ் சாலையின் ஓரங்களில் அதிகப்படியான குப்பைகள் ஆங்காங்கே சிதறி சுகாதாரசீர் கேடாக கிடக்கிறது. இதனால் மழைநேரங்களில் அந்த பகுதியில் மிகவும் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் சிதறியுள்ள குப்பைகளை அகற்றி குப்பைகளை போடுவதற்கென தனி குப்பைதொட்டியை வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.