அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் உள்ள அருள்மிகு சோழீஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் இக்கோவிலுக்கு அருகே உள்ள குளத்தில் பாசி படர்ந்து குப்பை கூளமாக உள்ளது. மேலும் குளத்தை சுற்றி சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து காடு போல காட்சியளிக்கிறது. இதனால் இந்த குளம் பயனற்ற நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை சுற்றியுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, சுற்றுச்சவர் அமைத்து குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.