பெரம்பலூர் மாவட்டம் செங்குனம் அண்ணாநகர் தெற்கு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் சாலையோரம் குப்பைத்தொட்டியில் குப்பைகள் நிரம்பி கீழே கொட்டிக்கிடக்கின்றன. இதனால் இப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றி, குப்பைத்தொட்டியை வேறு இடத்தில் மாற்றி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.