கோவை புலியகுளத்தில் இருந்து சவுரிபாளையம் செல்லும் சாலையோரத்தில் ஆங்காங்கே அதிகளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்கு சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.