துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி

Update: 2026-02-15 14:51 GMT

திண்டுக்கல் பூமார்க்கெட் அருகில் அம்மா உணவகம் செயல்படுகிறது. இந்த உணவகத்துக்கு அருகில் உள்ள காலியிடத்தை சிலர் திறந்தவெளி சிறுநீர் கழிக்கும் இடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அம்மா உணவகத்துக்கு உணவு சாப்பிட வரும் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து தீர்வு காண வேண்டும்.


மேலும் செய்திகள்