மதுரை வில்லாபுரம் கற்பகநகர் பகுதியில் சாலை ஓரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் அதிகளவு தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகின்றது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கும் குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.