சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2025-07-13 10:41 GMT

பெரம்பலூர் வட்டம் செங்குணம் அண்ணா நகரில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் காற்று அடிக்கும்போது குப்பைகள் சாலைகள் பறந்து செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்