கண்டுகொள்ளாத அதிகாரிகள்

Update: 2025-06-29 12:40 GMT

செங்கல்பட்டு மாவட்டம், நெய்குப்பி பஞ்சாயத்திற்குட்பட்ட நரசங்குப்பம் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நெய்குப்பி பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் நரசங்குப்பம் ஏரி அருகில் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் வயதானோர் மூச்சுதிணறல் பாதிப்புகளுக்கு உள்ளாகி, அவ்வபோது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்று வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் உயிர்சேதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை. இதை தடுக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்