மதுரை மாநகர், தாசில்தார் நகர், மருதுபாண்டியர் தெருவின் புதிய வார்டு எண்.36 வடக்கு கால்வாயில் குப்பைகளை அதிகளவில் கொட்டுவதாலும், குடித்து விட்டு தண்ணீர் பாட்டில்களை போடுவதாலும், மழை பெய்யும் காலங்களில் மழை நீர் செல்ல வழியின்றி தேங்கி கொசு உற்பத்தியாகிறது. மேலும் இந்த குப்பைகளால் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகின்றது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் உள்ள கால்வாயில் உள்ள குப்பைகளை அகற்றி முறையாக சுத்தம் செய்யவும், மழைநீர் தடையின்றிச் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்....