சேகரித்த குப்பைகளை எரிக்கலாமா?

Update: 2025-06-22 15:38 GMT

தம்மம்பட்டி பேரூராட்சியில் தினமும் ஒப்பந்த தொழிலாளர்கள் அந்தந்த பகுதிகளில் குப்பைகளை சேகரித்து பேரூராட்சி வாகனம் மூலம் கோனேரிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள பேரூராட்சி குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் காயிதே மில்லத் நகர், உடையார்பாளையம் பகுதிகளில் தள்ளுவண்டி மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் அண்ணா சமுதாய நலக்கூடம் அருகே கொட்டி எரிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் புகை மண்டலத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே குப்பைகளை எரிக்காமல் தவிர்க்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பொதுமக்கள், தம்மம்பட்டி.

மேலும் செய்திகள்