சுகாதாரம் இல்லாத கழிப்பறை

Update: 2025-06-22 12:56 GMT

திருவள்ளூர் மாவட்டம், ஈகுவார்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை சுகாதாரம் இல்லாமல் குப்பைகள் நிறைந்து உள்ளது. குறிப்பாக, மாணவிகள் பயன்படுத்தும் கழிப்பறையின் உள்ளே செல்லகூட முடியாமல் அசுத்தமாக கிடக்கிறது. இதனால் மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, பள்ளி நிர்வாகம் இதை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்